fbpx

மும்பையன்ஸ் செய்த அட்டூழியம் : ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பிரிவுகளில் வழக்கு …

இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வெடி வெடிக்க கூடாது என விதிமுறை விதிக்கப்பட்டிருந்தும் விதிகளை மீறினால் கூட மன்னித்துவிடலாம். இப்படிஅட்டூழியம் செய்த மும்பையன்ஸை போலீசார் மன்னிக்கமாட்டார்கள்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது . இதை ஒட்டி பட்டாசு, வாண வேடிக்கைகள் என மக்கள் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மும்பை அருகே தானேவில் ஒருவர் பட்டாசு வெடித்தது அனைவருக்கும் இடையூறை ஏற்படுத்தியது.
அடுக்குமாடி கட்டிடத்தின் ஜன்னல்கள் , பால்கனி என அப்பார்ட்மென்ட்டின் ஒவ்வொரு பகுதியாக டார்கெட் செய்து ராக்கெட் ஏவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. போலீசார் அந்த வீடியோவில் இருந்த நபர் யார் என தேடி வந்த நிலையில் தற்போது அவரை பிடித்து ஐபிசியில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐ.பி.சி. பிரிவுகள் 285 , 286, 336 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 285 என்பது எரியும் பொருட்கள் தொடர்பான அலட்சிய நடத்தைக்கானது. 286 பிரிவு வெடிக்கும் பொருள் தொடர்பான அலட்சியமாக செயல்படுவது.. 336 என்பது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவது ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Post

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இளம்பெண் சுத்தியலால் அடித்துக் கொலை ...

Tue Oct 25 , 2022
ஒரு தலையாக இளம்பெண்ணை காதலித்துவந்த நிலையில் தனது காதலை வெளிப்படுத்தியபோது ஏற்றுக் கொள்ள மறுத்ததால் இளம்பெண்ணை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் -பிந்து தம்பதி . இவர்கள் இருவருக்கும் விஷ்ணுபிரியா என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இளம்பெண் விஷ்ணு பிரியாவும் அதே […]

You May Like