அகில இந்திய மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் காரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்வாதி மாலிவால் மத்திய அமைச்சருக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில் பிக்பாஸ் 16 ல் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காளான நடிகர் சஜித்கானை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் இதையடுத்து அவருக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தது. நிறைய அழைப்புகள் இவரை மிரட்டி வந்தது பற்றி ஏற்கனவே டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இவரது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் கார்களை அடித்து நொறுக்கினர். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது பற்றி தகவல் வெளியிட்டுள்ள மாலிவால் அதிர்ஷ்டவசமாக நானும் என் அம்மாவும் வீட்டில் இல்லை எனவே தப்பித்தோம் இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என யூகிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் எதிரான போக்கில்இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்கள் என்னை பயமுறுத்துகின்றார்கள். நான் எதற்கும் துணிந்தவள் யாருக்காகவும் அஞ்சமாட்டேன். என்றார். தொடர்ந்து போராட்டத்தை நடத்துவேன் என தெரிவித்தார்.