fbpx

ஆட்டோ ஓட்டுனர் சில்மிஷம்!!  ஆட்டோவிலிருந்து இறங்க முயன்ற மாணவி தர தரவென இழுத்துச் செல்லப்பட்டு கொடுமை !!

ஒரு நாளில் ஒருமணி நேரத்தில் 4 பாலியல் சீண்டல் நடக்கும் நாட்டில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்ப கீழே இறங்க முயன்றபோது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில்தான் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. பள்ளி முடிந்தபின்னர் வீட்டுக்கு செல்ல மாணவி ஒருவர் ஆட்டோவில் ஏறி உள்ளார்.அந்த ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. எனவே அந்த மாணவி என்னை கீழேஇறக்கி விடுங்கள், ஆட்டோவை நிறுத்துங்கள் என கூக்குரலிட்டுள்ளார்.

எனவே ஆட்டோ ஓட்டுனரும் ஆட்டோவை நிறுத்துவது போல நிறுத்தி மாணவி இறங்குவதற்கு முன்பே ஆட்டோவை இயக்கிக் கொண்டு மாணவியிடம் கையை பிடித்து இழுத்துள்ளான். பின்னர் மாணவியை தர தரவென 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனால்அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே துரத்திக் கொண்டு அங்கிருந்த சில ஓடினர். அதற்குள் கீழே தள்ளிவிட்டு அந்த ஓட்டுனர் தப்பிவிட்டான்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்டமாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுனரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Post

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு கிருத்திகா உதயநிதி தயாராகின்றாரா? அவரே சொன்ன பதில் !!

Sun Oct 16 , 2022
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதாக திமுகவில் பேசப்பட்டு வருதற்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா? ஆம், கடந்த சில நாட்களாகவே அவர் தனது திரைப்படம் சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு கட்சி சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரங்கள் அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் […]

You May Like