fbpx

பொது இடத்தில் நிர்வாணமாக குளித்தால்..! மந்திரவாதியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவரும், மாமியாரும் கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி சில ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். மேலும், குழந்தை பிறந்தால் அது ஆண் குழந்தையாகத்தான் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பெண்ணின் கணவர் குடும்பத்தினர் இருந்துள்ளனர். இந்நிலையில், ஆண் குழந்தை பாக்கியம் பெறுவதற்காக மந்திரவாதி ஒருவரை பார்த்து வருமாறு அப்பெண்ணிடம் அவரது கணவரும், மாமியாரும் கூறியிருக்கின்றனர். அதனை ஏற்று அவரும் அந்த மந்திரவாதியைச் சென்று பார்த்துள்ளார்.

பொது இடத்தில் நிர்வாணமாக குளித்தால்..! மந்திரவாதியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அப்போது அந்த மந்திரவாதி, ‘ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் நீங்கள் பொது இடத்தில் உள்ள ஒரு அருவியில் நிர்வாணமாக குளிக்க வேண்டும்’ என அப்பெண்ணிடம் பரிகாரம் சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், மந்திரவாதி கூறியதை தனது கணவரிடமும், மாமியாரிடமும் சொல்லி, அவர் சொன்னபடி என்னால் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். ஆனால், அவரது கணவரும் மாமியாரும் மந்திரவாதி கூறியபடி செய்யுமாறு பலமுறை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவிக்கவே, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொது இடத்தில் நிர்வாணமாக குளித்தால்..! மந்திரவாதியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அதன்படி அந்த பெண் தன்னை நிர்வாணமாக குளிக்கச் சொன்ன மந்திரவாதி, தனது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், ஏற்கனவே அந்த பெண்ணை கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததும், ஆண் குழந்தை பிறக்காததால் மனதளவிலும், உடலளவிலும் அவரை துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலு,ம் அந்த பெண்ணின் கையெழுத்தை போலியாக இட்டு அவரது சொத்துக்களை அடமானம் வைத்து ரூ.75 லட்சம் கடன் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

மொத்தம் 60 இடங்கள்..! வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய தோல் தொழிற்சாலைகள்..! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!

Tue Aug 23 , 2022
வேலூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தோல் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் பிரபலமாக செயல்பட்டு வரும் ஃபரிதா மற்றும் கே.ஹெச் ஆகிய 2 குழுமங்களுக்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மையப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ஃபரிதா பிரைம் டேனரி பிரைவேட் லிமிடெட்’ குழுமத்துக்குச் சொந்தமாக தோல் பதனிடுதல் மற்றும் தோல் பொருள்கள் […]
மொத்தம் 60 இடங்கள்..! வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய தோல் தொழிற்சாலைகள்..! களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!

You May Like