fbpx

காருக்குள் கள்ளக்காதலி..!! தேடிவந்த மனைவியை அடித்து தூக்கிய சினிமா தயாரிப்பாளர்..!! பார்க்கிங்கில் பளார் பளார்..!!

வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிகேட்ட மனைவியை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார். அப்போது, மிஸ்ராவின் மனைவி அவரை தேடி கார் பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், மிஸ்ரா காரை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானார். ஆனால், காரில் வேறு ஒரு பெண் இருந்தார். அங்கு வந்த மிஸ்ராவின் மனைவி, காரில் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்து தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்செல்லும் மனநிலையில் இருந்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்றார்.

காருக்குள் கள்ளக்காதலி..!! தேடிவந்த மனைவியை அடித்து தூக்கிய சினிமா தயாரிப்பாளர்..!! பார்க்கிங்கில் பளார் பளார்..!!

இதில் மிஸ்ரா மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் மிஸ்ராவின் மனைவிக்கு கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார். காயம் அடைந்த அவரது மனைவி இதுகுறித்து அம்போலி போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மிஸ்ராவின் கார் இடித்து அவரது மனைவி கீழே விழுவது தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமறைவான மிஸ்ராவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

கழக உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த டி.டி.வி தினகரன்! முக்கிய அறிவிப்பு!

Thu Oct 27 , 2022
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ள இடத்தில், வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுபற்றி அமமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி […]

You May Like