fbpx

பேருந்து சக்கரத்தில் சிக்கிய கல்லூரி மாணவி … கொதித்தெழுந்த சக மாணவர்கள்…

பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர்.

பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு சக மாணவர்கள் மாணவியை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே பேருந்தை அப்படியே விட்டு விட்டு ஓட்டுனரும் , நடத்துனரும் தப்பி ஓடினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சில பேருந்துகள் அந்த நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை என குற்றசாட்டு வைத்தனர். ஊழியர்களின் அலட்சியத்தால் மாணவி படுகாயம் அடைந்ததாக மாணவர்கள் புகார் அளித்தனர்.

மாணவி படுகாயம் அடைந்த நிலையில் பன்னார்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க இனி அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Post

ஜெமினி கணேசன் மகளுக்கு நடந்த மோசமான நிகழ்வு … அந்த இயக்குனர் படு மோசமான ஆளு!

Mon Oct 10 , 2022
தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்று 70, 80 களில் புகழப்பட்டவர் ஜெமினி கணேசன். தன்னுடை நடிக்கும் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதில் அனைவரையும் மிஞ்சிய கலைஞர் தான் ஜெமினி கணேசன் அவர்கள். அப்படி அவருக்கும் நடிகை புஷ்பவல்லிக்கும் பிறந்த மகளாக சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ரேகா என்கிற பாணு ரேகா கணேசன். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற படத்தில் […]

You May Like