வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை கடந்த அக்டோபர் 1முதல் அதிகரித்து இருக்கிறது.
அதன்படி எஸ்பிஐ வங்கியானது அக்டோபர்-1,2022 முதல் அமலுக்கு வந்துள்ள வட்டி விகிதம் இபிஎல்ஆர் 8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15% ஆகும். பிஎன்பி(punjab national bank) வங்கியானது தற்போது வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 7.70%லிருந்து 8.40% ஆக உயர்த்தியுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியும் அதன் வட்டியை 8.45% ஆக உயர்த்தியுள்ளது. இதில் அதிகபட்சமாக வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி 9.25% உயர்த்தியுள்ளது, இந்த உயர்வு செப்டம்பர் 30 முதல் ஐசிஐசிஐ வங்கியில் அமலுக்கு வந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வங்கியில் வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த வட்டி விகிதத்தை பார்த்து வாங்கினால் நல்லது.