fbpx

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜூ காலமானார்..!

தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குவைறால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

கடந்த 1940ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், மொகல்தூரில் (தற்போது ஆந்திரப்பிரதேசம்) பிறந்த கிருஷ்ணம் ராஜூ, ‘Chilaka Gorinka’ என்ற திரைப்படத்தின் மூலம் 1966ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் வலம் வந்தார். இந்தி திரைப்படங்கள் உள்பட சுமார் 190-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். ‘ரெபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட இவர், நந்தி விருது, ஃபிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜூ காலமானார்..!

இவரின் சகோதரர் சூர்ய நாரயண ராஜூவின் மகன் தான், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ். இவரின் ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் கடைசியாக கிருஷ்ணம் ராஜூ நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி அரசியல் வாதியாகவும் வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜூ. பாஜகவில் சேர்ந்த இவர், காக்கிநாடா மற்றும் நாரசாபுரம் மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருமுறை எம்பியாகவும் இருந்துள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் கிருஷ்ணம் ராஜூ பதவி வகித்துள்ளார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜூ காலமானார்..!

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்ட வந்த கிருஷ்ணம் ராஜூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தர். அவரின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். நாளை அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜூ காலமானார்..!

Chella

Next Post

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை …வாழமுடியாத அளவுக்கு பிரச்சனை – கடிதத்தில் உருக்கம் ….

Sun Sep 11 , 2022
கன்னியாகுமாரியில் வெள்ளாங்கோடு பகுதியில் ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளாங்கோடு கரிங்க வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (52) . இவர் தனியார் வாகனம் ஓட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி வருகின்றார். இவரது மனைவி ரஜேஸ்வரி (46) , இவர்களின் மகள் நித்யா (22).  இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை […]

You May Like