fbpx

”நமக்கு எப்பவுமே அவன் தொல்லையா இருக்கான்”..!! நண்பனின் மனைவியை கரெக்ட் செய்து அடிக்கடி உடலுறவு..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). காவலாளியாக பணியாற்றி வரும் இவருக்கு, ஷிவானி (30) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ரமேஷ் மனைவி ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், ரமேஷ் வீட்டில் இல்லாதபோது, இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டு ஜாலியாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே, இவர்களின் கள்ளக்காதலுக்கு கணவர் ரமேஷ் இடையூறாக இருந்துள்ளார். இதனால், அவரை தீர்த்துக் கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷுக்கு, அவரது மனைவி ஷிவானி அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளார். இதையடுத்து, போதையில் மட்டையான ரமேஷை இருவரும் சேர்ந்து தலையணையை வைத்து முகத்தை அமுக்கி கொலை செய்தனர்.

பின்னர், எதுவும் தெரியாதது போல மறுநாள் காலையில் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததாக கதறி அழுது நாடகமாடியுள்ளார் ஷிவானி. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் ரமேஷ் மனைவியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, ராமாராவுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

பெற்றோர்களே உஷாராக இருங்க..!! 10ஆம் வகுப்பு மாணவியை பள்ளி வேனிலேயே வைத்து பலாத்காரம் செய்த ஓட்டுநர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Sun Aug 27 , 2023
பள்ளி வேனிலேயே பத்தாம் வகுப்பு மாணவி, ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பன்வெல், உசார்லி விலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு குமார். இவருக்கு வயது 40. இவர், பள்ளி மாணவர்களுக்கு வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் ரிங்கு குமார், மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு பேருந்தில் வீட்டிற்கு சென்றார். ஒவ்வொரு இடமாக அனைத்து மாணவர்களையும் வீட்டில் இறக்கிவிட்ட பின் […]

You May Like