தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகக் கூறி பெண் தோழி ஒருவர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயது இளம்பெண்கள் சமூக வலைதளம் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளனர். இருவரும் இடையே நட்பு உருவாகி அதீத நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் திடீரென்று ராஜஸ்தானின் நகவுர் பகுதியில் வசிக்கும் தனது தோழி வீட்டிற்குள் நுழைந்து கலாட்டா செய்யத் தொடங்கியுள்ளார்.

தனக்கும் அந்த வீட்டு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என மிரட்டி கலாட்டா செய்த அந்த பெண், இல்லையென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளார். தனது கோரிக்கையை ஏற்காவிட்டால், இருவரும் பேசிய சாட்டிங் பதிவுகளை லீக் செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அந்த பெண் செய்த கலாட்டாவால் மிரண்டு போன ராஜஸ்தான் பெண்ணின் குடும்பத்தார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறை கைது செய்தது.