fbpx

அரசு விடுதியில் நுழைந்த உள்ளூர் ரவுடிகள்..!! மாணவியை தூக்கிச் சென்று பலாத்காரம்..!! கொட்டும் மழையில் கொடூரம்..!!

அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியை உள்ளூர் ரவுடிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜம்தோலி பகுதியில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரை உள்ளூர் ரவுடிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இச்சிறுமிகள் வீதியில் இறங்கியும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். மேலும், தாங்கள் ஏற்கனவே குற்றவாளிகள் குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால், காவல்துறையினர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரசு விடுதியில் நுழைந்த உள்ளூர் ரவுடிகள்..!! மாணவியை தூக்கிச் சென்று பலாத்காரம்..!! கொட்டும் மழையில் கொடூரம்..!!

இந்நிலையில், போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் ஜெய்ப்பூர் கனோட்டா காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிறுமிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முன்னதாக, சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு விடுதியில் நுழைந்த உள்ளூர் ரவுடிகள்..!! மாணவியை தூக்கிச் சென்று பலாத்காரம்..!! கொட்டும் மழையில் கொடூரம்..!!

Chella

Next Post

அதிகன மழைக்கு ஒரே நாளில் 9 பேர் பலி … உத்தரபிரதேசத்தில் பள்ளிகள் மூடல்..

Mon Oct 10 , 2022
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக […]

You May Like