மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள பல்லார் ஷா ரயில்வே நிலையத்தின் நடைபாதைப் பாலம் 60 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. நடைமேடை எண் 1 மற்றும் 4-ஐ இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் பல ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது.இந்நிலையில், நேற்று(நவ.27) மாலை 5 மணி அளவில் அந்தப் பாலத்தின் தகடுகள் திடீரென உடைந்து விழுந்தன. இதனால் அந்த பாலம் வழியே நடந்துசென்றவர்கள் நிலைதடுமாறு கீழே தண்டவாளங்கள் மீது விழுந்தனர்.
இந்த ரயில்வே நடை மேம்பாலம் விபத்தில் 20 பேர் காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகின, மேலும் இவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும் 60 அடி உயரத்திலிருந்து விழுந்தவர்களின் நிலை என்ன எனும் அச்சம் எழுந்திருக்கிறது.