வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு எழும்பலாசேரி பகுதியில் அமைந்திருக்கும் ஏடிஎம் மையத்தில் கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், வெடி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்தி பணம் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால், வெடி வெடித்ததும் வங்கியின் கிளை மேலாளருக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட வங்கி மேலாளர், இதுதொடர்பாக காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்-களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களிலும் ஏடிஎம் கொள்ளைகள் அதிகரித்து வருகிறது.