மாமனாரின் அந்தரங்க பகுதியில் மருமகள் ஆவேசமாக எட்டி உதைத்ததால், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா மாவட்டம் நாத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் பதியா கட்டாரா. இவரது மருமகள் சந்தோஷ். நிலத்தகராறு தொடர்பாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற மருமகள், மாமனாரை அடிக்க பாய்ந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த குடும்பத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். ஆனால், மருமகள் சந்தோஷின் ஆத்திரம் தீரவே இல்லை. மாமனாரை மீண்டும் மீண்டும் அடிக்க பாய்ந்திருக்கிறார். அவரை அடிக்க விடாமல் பதியாவின் மனைவி பிடித்துக் கொண்டதால் கால்களால் மாமனாரின் அந்தரங்க பகுதியில் பலமுறை எட்டி உதைத்திருக்கிறார் மருமகள் சந்தோஷ்.
![அதிர்ச்சி..!! மாமனாரின் அந்தரங்க பகுதியில் மருமகள் செய்த காரியத்தால் சிகிச்சை பலனின்றி பலி..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/07/raaa.jpg)
அதை அடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும், வலி தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மறுதினமே மீண்டும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. இதனால், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மருமகள் சந்தோஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.