7 மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி, பிரசவ வலியின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது 7 மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், மீண்டும் அந்த கருவை அப்பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ளார்.
பின்னர், புதன்கிழமை அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, அதே மருத்துவமனையில் மீண்டும் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் முழு கதையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அவரது குடும்பத்தினர் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.