fbpx

உதவி மருத்துவர் பணிக்கு தமிழ் தேர்வு கட்டாயம்…

தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி மருத்தவர் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

உதவி அறுவை சிகிச்சை பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் பிற மாநிலத்தவர்களை தவிர்க்கும் விதமாக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு புறம் தேர்வு வாரியத்தின் இந்த முயற்சி தமிழ் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றாலும், தமிழகத்தில் பிற மொழிப் பாடங்களை தேர்வு செய்து மருத்துவத்துறையில் கால்பதிக்கும் மாணவர்களும் உள்ளனர். இது சற்று சிரமமாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Post

மனைவிக்கு போட்ட வலையில், மாமியார் சிக்கிய சம்பவம்..!! தூக்கி அடித்த மின்சாரம்..!! தெறித்து ஓடிய மருமகன்..!!

Tue Oct 11 , 2022
மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட கணவனின் வலையில், மாமியார் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவன், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். […]

You May Like