fbpx

மோசடி வழக்கில் சிக்கிய தமிழ் பட வில்லன்..!! வாடகைக்கு விட்ட ரிசார்ட்டால் வந்த வில்லங்கம்..!!

தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் பாபுராஜ். 1994ஆம் ஆண்டு பீஷ்மாச்சாரியர் என்ற படத்தில் அறிமுகமான இவர், மாயாமோகினி, ராஜமாணிக்கம், ஜோஜி, கூமன் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் அஜித்தின் ஜனா, விக்ரமின் ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப் பிரபலமான வாணி விஸ்வநாத்தின் கணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்தமாக இடுக்கி மாவட்டம் கல்லாரில் ஒரு ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.40 லட்சம் முன்பணமாக பெற்று, மாதம் 3 லட்ச ரூபாய் வாடகை என்கிற அடிப்படையில்
குத்தகைக்கு விட்டிருந்ததார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அந்த ரிசார்ட்டை அருணால் நடத்த முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு அந்த ரிசார்ட்டை திறக்க முயன்றபோது அது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ரிசார்ட் என்பதும், இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்த பிரச்சனைகளை தீர்த்து தான் ரிசார்ட்டை திறந்து நடத்த ஆவண
செய்யுமாறு அருண் அதனை குத்தகைக்கு விட்ட நடிகர் பாபுராஜிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் பாபுராஜ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அருண் தனது பணத்தை திருப்பி கேட்ட போதும் பாபுராஜ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2021இல் பாபுராஜ் மீது அடிமாலி காவல் நிலையத்தில் அருண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் பாபுராஜ் வழக்கும் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் பேரில் அடிமாலி காவல் நிலையத்தில் ஆஜராகி தொடர்ந்து கையெழுத்துட்டு வந்தார். இந்நிலையில், நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்த போது காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Chella

Next Post

’வைரலாகும் வந்தே பாரத் ரயிலின் வடை’..!! எண்ணெய்யை பிழிந்து எடுக்கும் பயணி..!!

Mon Feb 6 , 2023
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே சர்ச்சைக்கு குறைவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிவேக விரைவு ரயிலாக இருக்கக் கூடிய இந்த ரயில், கால்நடைகள் குறுக்கிட்டு பழுதாவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இந்த ரயில் 7 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், எட்டாவதாக செகந்திராபாத் முதல் விசாகப்பட்டினம் வரையிலான வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்குவதற்கான சேவையை கடந்த ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]
’வைரலாகும் வந்தே பாரத் ரயிலின் வடை’..!! எண்ணெய்யை பிழிந்து எடுக்கும் பயணி..!!

You May Like