கடந்த 5 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தற்போது மருத்துவத்துறையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள், தொழில்நுப்டங்கள் வந்து விட்டன. ஆனாலும், சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைபாடு காரணமாக சில நேரங்களில் அவ்வப்போது தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியில் வசித்து வருபவர் இளம் பெண் ஹர்சீனா. இவருக்கு வயது 30 . இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் ஹர்சீனாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
![’பிரசவத்தில் வெளியே வந்த குழந்தை... உள்ளே வைத்த கத்தரிக்கோல்’..!! அலட்சியத்தால் 5 ஆண்டுகளாக அவதிப்பட்ட பெண்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Doctor.jpg)
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஹர்சீனா, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் பரிந்துரையின் படி ஸ்கேன் செய்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்சீனா வயிற்றுக்குள் 12 செ.மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹர்சீனாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த கத்தரிக்கோல் அகற்றப்பட்டது. இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார். ஹர்சீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.