fbpx

பரிகார பூஜை எனக்கூறி படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற போலி மந்திரவாதி..!! ரூமுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதி பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் மனவேதனை அடைந்துள்ளார். இதனால், அங்கிருந்த மந்திரவாதி ராஜா ஷேக்கை நாடி சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அந்த பெண்ணை ராஜா ஷேக் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணை வீட்டில் வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பரிகார பூஜை எனக்கூறி படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற போலி மந்திரவாதி..!! ரூமுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்..!!

மேலும், இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மந்திரவாதி மிரட்டியுள்ளார். ஆனால், அதையும் மீறி அந்த பெண், நடந்தவற்றை காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மந்திரவாதி ஷேக் ராஜாவை கைது செய்த காவல்துறையினர், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்குப்திவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

விரைவில் தொடங்குகிறது ஏகே 62 பட சூட்டிங்! இயக்குனர் யார் தெரியுமா?

Mon Jan 2 , 2023
உருவாகி இருக்கும் திரைப்படம் துணிவு இந்த திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாக இருக்கிறது. விஜய் படமும் அஜித் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. ஆகவே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், துணிவு திரைப்படத்தின் படபிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் அதன் பிறகு பைக் ரெய்டு மற்றும் தன்னுடைய குடும்பத்தினருடன் தன்னுடைய நேரத்தை செலவு செய்து வருகிறார். ஆனால் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித்குமார் வருவார் […]

You May Like