fbpx

ஒரு பூசணிக்காயின் விலை ரூ.47,000..! கேரளாவில் களைகட்டிய ஏலம்..!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஏலத்தில் ஒரு பூசணிக்காய் 47,000 ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் படுஜோராக நடைபெறும். இந்த போட்டிகளில் மக்களும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். பொது ஏலத்தில் மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை ஏலம் விடுவர். இந்த ஆண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கியின் மலைப் பிரதேசத்தில் உள்ள புலம்பெயர்ந்த கிராமமான செம்மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை பொது ஏலம் நடைபெற்றது.

ஒரு பூசணிக்காயின் விலை ரூ.47,000..! கேரளாவில் களைகட்டிய ஏலம்..!

இந்த ஏல நிகழ்ச்சி ஆரம்பம் முதலே களைகட்டியது. மக்களும் ஆர்வத்துடன் தங்களது ஆடு, கோழி என பலவற்றை ஏலமிட்டனர். இதில், ஜார்ஜ் என்பவரின் நிலத்தில் விளைந்த பூசணிக்காய் ஏலத்திற்கு வந்தது. 5 கிலோ எடைக்கொண்ட இந்த பூசணிக்காயின் ஆரம்ப விலை ரூ. 5,000 என ஏலம் தொடங்கியது. ஏலம் போக போக இந்த பூசணிக்காயின் விலை உயர்ந்து கொண்டே போனது. இறுதியாக அந்த பகுதியைச் சேர்ந்த சிபி என்பவர் பூசணிக்காயை ரூ. 47,000-க்கு ஏலம் எடுத்தார். பூசணிக்காய் இவ்வளவு விலைக்கு ஏலம் சென்றது இதுவே முதல் முறை என மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

Chella

Next Post

’இந்த காரணத்திற்காக தான் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு’.! பரபரப்பை கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்.!

Tue Sep 13 , 2022
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள்எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான 39 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. […]
ரூ.7100 ரொக்கம்... அம்மாவின் நகைகள் மட்டுமே பறிமுதல்..! எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

You May Like