சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்க டாலரின் மதிப்புதான் உயர்ந்துள்ளது … என்ற தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் . முன்னதாக செய்தியாளர்களைச்சந்தித்தபோது இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க டாலரின்மதிப்பு சர்வதேச சந்தையில் வலுவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது. அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன. தொழில்நுட்ப ரீதியாக பேசவில்லை என்ற அவர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சீராக உள்ளது. என்றார்.
சர்வதேச சந்தையில் பிற நாடுகளின் நாணய மதிப்புகளை விட இந்திய ரூபாயின் மதிப்பு மேல் நிலையிலேயே உள்ளது. மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலர் மதிப்புமான் கூடுதலாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் முயற்சிகள் அனைத்தும் ஏற்றத்தை நோக்கிதான் உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பை நிலைப்பெறச் செய்ய இல்லை என தெரிவித்தார்.