fbpx

திக் திக் நிமிடங்கள்..!! லிப்ட்டில் சிக்கிய 3 சிறுமிகள்..!! பதறி துடிக்கும் சிசிடிவி காட்சி..!!

அடுக்குமாடு குடியிருப்பு ஒன்றில் 3 சிறுமிகள் லிப்ட்டில் சிக்கிக் கொண்டு மூச்சுவிட முடியாமல் தவித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் அசோடெக் தி நெஸ்ட் சொசைட்டி ஆஃப் கிராசிங்ஸ் ரிபப்ளிக் எனும் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இந்த கட்டத்தில் வசிக்கும் 8 முதல் 10 வயதுள்ள மூன்று குழந்தைகள் லிப்ட்டில் சென்றுள்ளனர். அப்போது திடீரென இயந்திர கோளாறு காரணமாக லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் சிறுமிகள் அதிர்ச்சியடைந்து அலறி துடித்துள்ளனர். பின்னர் பயத்தில் அழுதபடியே லிப்ட் கதவைத் திறக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. இறுதியில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட மற்ற இரு குழந்தைகளும் சமாதானம் செய்ய முயற்சி செய்து ஆறுதல் கூறுகின்றனர்.

திக் திக் நிமிடங்கள்..!! லிப்ட்டில் சிக்கிய 3 சிறுமிகள்..!! பதறி துடிக்கும் சிசிடிவி காட்சி..!!

பின்னர், லிப்ட் இவ்வளவு நேரமாக வேலை செய்யாததை அடுத்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்த பிறகு, லிப்டை திறந்தபோதுதான் அதற்குள் 3 சிறுமிகள் மூச்சுவிட முடியாமல் இருந்தது தெரியவந்தது. கிட்டத்தட்டச் சிறுமிகள் 20 – 30 நிமிடங்கள் லிப்டில் இருந்துள்ளனர். இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக குடியிருப்பு தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை கூறுகையில், ”அடிக்கடி இந்த லிப்ட் பழுதாகி விடுகிறது. இதை சரிசெய்ய வேண்டும் என கூறியும் குடியிருப்பு நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது சிறுமிகள் லிப்ட்டில் மாட்டிக் கொண்டனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் அதற்குப் பொறுப்பேற்பது” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Chella

Next Post

’இப்போதான படுத்தேன் அதுக்குள்ள கூவுதே’..!! சேவலால் எரிச்சலாகி காவல்துறையை நாடிய மருத்துவர்..!!

Thu Dec 1 , 2022
அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் காவல்துறையை நாடியிருப்பது மத்தியப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. அதன்படி, இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் மருத்துவர் அலோக் மோடி. அவரது புகாரில், ”எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் […]
’இப்போதான படுத்தேன் அதுக்குள்ள கூவுதே’..!! சேவலால் எரிச்சலாகி காவல்துறையை நாடிய மருத்துவர்..!!

You May Like