இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது.
சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த ரயில் 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோ மீட்டர் தூரத்தை வெகுவிரைவாக கடக்கும் . சென்னையில் இருந்த மைசூருவுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சேவையை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது புது டெல்லி, வாரணாசி, மும்பை,அகமதாபாத், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய 4 வழித்தடங்களில் சீராக இயங்கப்பட்டு வருகிறது.
காலை 5 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் அரக்கோணம் வரை 130 கி.மீ. வேகத்தில் சென்றது.காலை 8.50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், 10.25க்கு பெங்களூரு ரயில் நிலையத்தையும் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 5 நிமிடங்கள் நின்ற பின்னர் 10.30க்கு புறப்பட்டு 12.30 மணிக்கு மைசூருவை அடையும்.
மைசூருவில் இருந்து 1 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு 4.45க்கு வந்தடையும் சென்னைக்கு 7.45 மணிக்கு வந்தடைகின்றது.