fbpx

மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் என்பவர், அதே பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடிபழக்கம் காரணமாக சரவணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணனின் மனைவி தன் பிள்ளைகளை கணவரிடம் விட்டு விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குழந்தைகளிடம் கேட்டபோது அவர்கள், அப்பா எங்களிடம் இரவில் தவறாக நடக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர்.

மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணனின் மனைவி, முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

மரத்தை சுற்றி கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு போட்ட ஒப்பந்ததாரர்... கரூரில் நடந்த கொடுமை..!

Fri Aug 26 , 2022
கரூரில் சாலையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் உள்ளே செல்ல முடியாதவாறு மரங்களைச் சுற்றி தார் சாலை அமைத்த நல்ல மனம் படைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து கோவை சாலை திருக்காம்புலியூர் வரை தார் சாலை போடும் வேலை நடந்து வருகிறது. சாலையின் இருபுறமும் நிழலுக்காக வைக்கப்பட்டிருக்கும் மரங்கள் மீது தார் […]

You May Like