கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கோதுமை விலையை கட்டுப்படுத்த அரசு கழகங்களில் இருந்து 30 லட்சம் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து, இந்திய உணவு கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலம் இன்னும் ஒரு வாரத்தில் விற்பனை தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்த வியாபாரிகளுக்கு கோதுமை விற்பனை செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் 30 லட்சம் டன் விற்பனை நிறைவடையும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.