ஹைதராபாத்தில் WWE போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ப்ரோ மல்யுத்த உலகில் WWE ஒரு உலகளாவிய மாபெரும் நிறுவனமாக இருந்து வருகிறது. அவர்கள் பல்வேறு சந்தைகளில் பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளனர். WWE போட்டிக்கான முக்கிய வெளிநாட்டு சந்தைகளில் இந்தியாவும் ஒன்று.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி WWE போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, WWE நட்சத்திரங்கள் இந்தியா வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.