சமீபகாலமாக பலரும் விரும்பி உண்ணப்படும் உணவாக, காளான் இருக்கிறது. அவை சூரிய ஒளியில் இருந்து ஆற்றலைப் பெற்று, அதை மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) ஆக மாற்றி வளர்கின்றன. பொதுவாக காளான்கள் தாங்கள் வளர்வதற்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகளை மற்ற தாவரங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதனால், காளான்களை பூஞ்சை குடும்பத் தாவரமாக அடையாளப்படுத்துகின்றனர்.
காளான்கள் 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. இதில், முதல் வகை, ‘சப்ரோபைட்டுகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள் ஆகும். இவை இலைகள், வேர்கள், இறந்த மரம் போன்ற இறந்த கரிமப் பொருட்களில் வளரக் கூடியவை. இந்த பிரிவில் சிப்பி காளான்கள், வெள்ளை பட்டன் காளான் போன்றவை அடங்கும். இவை, நல்ல சுவைமிக்க மற்றும் மருத்துவ வகைகளாகவும் உள்ளன.
இரண்டாவதாக ‘ஒட்டுண்ணிகள்’ எனப்படும் பூஞ்சை காளான்கள். இவை ‘காளான் கொலையாளிகள்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு மரம் விழுந்துவிட்டால், அதன் மேல் இந்த காளான் தோன்றும். இந்த வகை காளான்கள் விழுந்த மரத்தின் மிச்சம் மீதி சத்துக்களை உறிஞ்சி, அதை முற்றிலுமாக இல்லாமலே செய்துவிடும்.
மூன்றாவதாக ‘மைக்கோரைசா’ வகை காளான்கள். இவை மரத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக் கொண்டு, மரத்திற்குத் தேவையான சில ஊட்டச்சத்துக்களை மண்ணில் இருந்து உறிஞ்சித் தருகிறது. நிலத்தில் மற்றும் தாவரங்களில் இருந்து சத்துக்களை உறிஞ்சி வாழும் காளான்களில் இயற்கையாகவே பலவிதமான சத்துக்கள் உள்ளது.
இருப்பினும், அனைத்து காளான்களும் சாப்பிடக் கூடியது அல்ல. காடுகளிலோ அல்லது இயற்கையாகவோ காணப்படும் காளான்களில் சில விஷத்தன்மையும் இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் மற்றும் உண்ணக்கூடிய வகை காளான்களை மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது.
Read More : “இந்த தேதிகளில் ரேஷன் கடைக்கு போகாதீங்க”..!! மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!