நடிகர் கார்த்திக் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ் திரைத்துறையில் நவரச நாயகன் என அழைக்கப்படுபவர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு Play Boy என்று சினிமா வட்டாரங்களில் பலரும் கூறியுள்ளனர். இந்நிலையில், பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், நடிகர் கார்த்திக் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “பல நடிகைகள் நடிகர் கார்த்திக் காதலில் விழுந்தார்கள். ஆனால், அவர் எந்த நடிகையிடமும் தவறாக நடந்துகொள்ளவில்லை. நடிகையான ஸ்ரீ பிரியா கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புடுத்தினார். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால், நடிகை ஸ்ரீ பிரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அன்றைய காலத்தில் இதை பற்றி பல பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதன் பிறகு ஸ்ரீ பிரியா, ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.