பகீர்….. குழந்தையின் மீது கொதிக்கும் பாலை தெளிக்கும் சாமியார்! கண்டனங்களை பதிவு செய்யும் நெட்டிசன்கள்!

எவ்வளவுதான் அறிவியல் தொழில்நுட்பம் கல்வி என வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகளும் ஒரு பக்கம் இதற்கு சமமான வேகத்தில் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. குழந்தையின் மீது சாமியார் ஒருவர் சூடான பாலை தெளிப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த மூடநம்பிக்கைக்கு எதிராக பல்வேறு மக்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் பனாரஸ் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கரகா பூஜையின் ஒரு பகுதியாக இந்தச் சடங்கு நடத்தப்பட்டிருக்கிறது.


அந்தச் சடங்கின் போது சாமியார் ஒருவர் தன் கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்து அதன் மீது சூடான பாலை தெளிக்கிறார் . இந்த காணொளி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இதனைப் பார்த்து நெட்டிசன்கள் எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் இந்த மக்களின் அறிவு மூடநம்பிக்கைகளில் மூழ்கி போயிருக்கிறது என தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த காணொளியில் பிஞ்சு குழந்தையின் மீது பாலை ஊற்றும்போது சூடு தாங்காமல் அந்த குழந்தை அழுகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகளும் இன்னும் வளர்ந்து கொண்டே வருவது வேதனையான ஒன்று என மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .

1newsnationuser5

Next Post

"லேடி போலீஸ் கிட்டயேவா?"ஓடும் பஸ்ஸில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை! முன்னாள் ராணுவ அதிகாரி கைது!

Thu Apr 13 , 2023
ஊட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரரமாரியாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை என்ற கிராமத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். பணி நிமித்தமாக கோயமுத்தூர் சென்ற இவர் வேலையை முடித்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பஸ்ஸில் வந்துள்ளார். பின்னர் […]
IMG 20230413 WA0331

You May Like