புதிய பாராளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதிக்குள் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மே 26-ம் தேதி பதவியேற்ற நாள் என்பதால், அதே தேதியில் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டிற்கான ஜி20 தலைவர் பதவியை இந்தியா பெற்றுள்ளதால், ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் புதிய கட்டிடத்தில் நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. முக்கோண வடிவ கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கியது, ஆகஸ்ட் 2022 க்குள் முடிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.