இந்திய விமானப் படை-க்கு கிடைத்த புதிய சக்தி..!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயக்கும் முன்னணி விமான எஞ்சின் சப்ளையரான GE ஏரோஸ்பேஸ் இன்று இந்திய விமானப் படையில் பயன்படுத்தும் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா ஆயுத உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை HAL உடன் இணைந்து அமெரிக்காவின் GE ஏரோஸ்பேஸ் தயாரிப்பது முக்கியமாக விஷயமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்காவின் முதல் அரசு பயணத்தில் இந்த GE ஏரோஸ்பேஸ்- HAL மத்தியிலான ஒப்பந்தம் மிகவும் முக்கிய மைல்கல் GE ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் GE ஏரோஸ்பேஸின் F 414 ரக இன்ஜின்களை கூட்டணியில் தயாரிக்கப்படுகிறது.


அமெரிக்காவின் Ohio-வை தலைமையிடமாகக் கொண்ட GE ஏரோஸ்பேஸ் இந்தியாவில் F 414 ரக இன்ஜின்களை கூட்டணியில் தயாரிக்க தேவையான ஏற்றுமதி அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவதாக கூறியுள்ளது. தற்போது இந்திய விமான படையில் இருக்கும் Mk1A விமானத்திற்கு பயன்படுத்த 75 F404 இன்ஜின்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது, 99 இன்ஜின்களுக்கான ஆர்டர் வைக்கப்பட்டு உள்ளது. Mk2 விமானங்களில் பயன்படுத்த 8 F414 ரக இன்ஜின்கள் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தம் மூலம் Mk2 திட்டத்திற்கு சேவையான இன்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்…..? லிஸ்ட் ரெடி…..!

Thu Jun 22 , 2023
வரும் 30ஆம் தேதி உடன் தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்பு பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடுத்த தலைமைச் செயலாளரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் அடுத்த தலைமைச் செயலாளர் பதவிக்கு மூன்று பேரிடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹேண்ட்ஸ் ராஜ் வர்மா வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரியும் எஸ் கே பிரபாகர், […]
TN govt 1

You May Like