செட்டிநாடு குழும நிறுவன அலுவலகங்களிலும் அதன் தொடர்புடைய இடங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.
2020ஆம் ஆண்டு செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்நிறுவனம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் கணக்கில் காட்டாத ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையினர் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ருக்மிணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவது கவனம் பெற்றுள்ளது.