அடுத்த அதிரடி..!! செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

செட்டிநாடு குழும நிறுவன அலுவலகங்களிலும் அதன் தொடர்புடைய இடங்களிலும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.


2020ஆம் ஆண்டு செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது அந்நிறுவனம் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாடுகளிலும் கணக்கில் காட்டாத ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையினர் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ருக்மிணி லட்சுமிபதி சாலை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவது கவனம் பெற்றுள்ளது.

CHELLA

Next Post

ஆசிரியர் செய்யும் காரியமா இது..? 24 மாணவிகளை தினமும் அழைத்து..!! யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன்..!!

Mon Apr 24 , 2023
திருவண்ணாமலைக்கு அருகே உள்ள டி.கல்லேரி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த சி.லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை தினமும் அழைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது பற்றி யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடித்துள்ளார். […]
rape attampt

You May Like