அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஏர்டெல்!… அனைத்து வகை ரீசார்ஜ் பிளானை உயர்த்த திட்டம்!… குறைந்த ரீசார்ஜ் இனி ரூ.300?

அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொலைத்தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் 5ஜி சேவையும் ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 1ம் தேதி நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல், நிறுவனத்திற்கு வரும் லாபம் குறைந்துள்ளதால் ரிசார்ஜ் விலையை உயர்த்த வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மக்கள் 30 ஜிபி டேட்டா வரை விலையில்லாமல் உபயோகித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அதிகரித்து வரும் போட்டி மற்றும் 5ஜி ஏலத்திற்காக செலவு செய்த முதலீடு தொகையை ஆகியவற்றின் காரணமாக தற்போது பிளான்களில் உள்ள அனைத்து திட்டங்களையும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளான் ரூபாய் 99 என்பதை மாற்றி ரூ.149 என உயர்த்திய நிலையில் தற்போது குறைந்த பட்சம் ரீசார்ஜ் ரூபாய் 200 அல்லது 300 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச ரிசார்ஜ் பிளான் ஆன் ரூ.99 பிளானை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்தபட்சமாக ஒரு ரிசார்ஜ்-க்கு ரூ.200 வரை லாபம் வரும் நிலையில் அதை ரூ.300 வரை மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் உதவியுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் கட்டமைப்புகளை அரசு உயர்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அதிக மூலதனம் செய்திருந்தாலும் அதிலிருந்து வருமானம் குறைவாகவே இருப்பதால் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்று கூறிய சுனில் பார்தி மிட்டல், இந்த கட்டண உயர்வு இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் சேவை தரமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளர்.

1newsnationuser3

Next Post

இளம்வயதினரிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் மரணங்கள்!... பேட்மிண்டன் விளையாடியபோது நிகழ்ந்த பரிதாபம்! ஐதராபாத்தில் சோகம்!

Fri Mar 3 , 2023
ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள ஷியாம் யாதவ், பணி முடிந்து தினமும் சக ஊழியர்களுடன் […]
hyderabad heart attack death

You May Like