’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

அமெரிக்காவின் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


அமெரிக்காவில் பங்குச் சந்தையின் தலைமையிடமாக உள்ளது வால் ஸ்ட்ரீட். உலகின் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் இங்கு தான் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அமெரிக்க பங்கு சந்தை தொடர்பான தகவல்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் வெளியிடும். அங்கு வெளியாகும் முக்கியமான செய்தித்தாளாக இது பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அந்த இதழலில் வெளியான விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதாவது, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்திய அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்டவர்களுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் வழக்கு தொடர்பாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

இந்த விளம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்ல இருந்த நிலையில், சரியாக அப்போது இந்த விளம்பரம் வெளியாகி உள்ளது. தேவாஸ் நிறுவனத்தின் ஓனர் ராமச்சந்திர விஸ்வநாதன் தன் மீது நியமற்ற விசாரணையை இந்தியா நடத்தி உள்ளதாகக் கூறியுள்ளார். நியாயமற்ற விசாரணை தன்னை குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களைக் கைப்பற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறும் ராமச்சந்திர விஸ்வநாதன், இதனால் 11 இந்திய உயரதிகாரிகள் மீது “மேக்னிட்ஸ்கி சட்டம்” கீழ் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் மனு அளித்து இருந்தார். இந்த ராமச்சந்திர விஸ்வநாதன் இப்போது அமெரிக்கக் குடிமகனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

இது தொடர்பாக ஐடி துறை மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, “இது மோடி அரசுக்கு எதிரான விளம்பரம் மட்டுமல்ல. இது நமது நாட்டின் நீதித்துறையைச் சீரழிக்கும் முயற்சி. மோசக்காரர்கள் அமெரிக்க ஊடகங்களை ஆயுதமாக்குவது வெட்கக்கேடானது. இந்த விளம்பரத்தை வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அனுமதித்து இருக்கக் கூடாது. இது மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கை. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது. ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி விஸ்வநாதன் இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

’நிர்மலா சீதாராமன், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தடை விதிக்கணும்’..!! அமெரிக்காவின் விளம்பரத்தால் சர்ச்சை..!!

என்ன வழக்கு..?

பெங்களூரைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியாவிற்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கும் இடையே 2005இல் சாட்டிலைட் இயக்க போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்ரோ 1.3 பில்லியன் டாலரை தேவாஸ் மல்டிமீடியாவுக்கு வழங்க வேண்டும் என்று சர்வதேச வர்த்தக சம்மேளனம் அளித்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து தேவாஸ் கணக்குகளை முடக்கப்பட்டது. மேலும், இன்டர்போலிடம் விஸ்வநாதனைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ரேட் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவரை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்தது.

CHELLA

Next Post

மர்மமான வீடு.. உள்ளே நுழைந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! கைதான அந்தோணி.!

Mon Oct 17 , 2022
புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து செல்வோரை கவனித்துள்ளனர். சில ஆண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வீட்டிற்குள் வந்து […]
உங்க வீட்லயும் சென்சார் பூட்டு இருக்கா..? ஜாக்கிரதையா இருங்க..!! 300 சவரன் நகை அபேஸ்..!!

You May Like