உடல் ஆரோக்கியம் சரியாக நிர்வாண பூஜை..!! பெற்றோரிடம் பேரம் பேசிய போலி சாமியார்..!! பதறிய இளம்பெண்..!! நடந்தது என்ன..?

ஆந்திராவில் இளம்பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய முயன்ற போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.


ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டூர் பகுதியில் சிறுமிகளை அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்ததாக கூறி ஒரு லட்சம் தருகிறோம் என கூறிய பதினைந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ரேணிகுண்டா பகுதியில் உடல் ஆரோக்கியம் சரியாக இளம் பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்வதாக கூறி போலீ சாமியார் ஒருவர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியுள்ளார்.

அப்போது பூஜையின் போது அந்த பெண்ணின் ஆடைகளை கழட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால், பயந்துபோன அப்பெண் அங்கிருந்து தப்பித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த போலி சாமியார் அமீரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

ரூ.252 முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் ரூ.54 லட்சம்..!! எல்.ஐ.சி.-யின் சூப்பர் சேமிப்புத் திட்டம்..!!

Wed May 17 , 2023
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. அனைத்து தரப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாலிசிகளை விட அதிக பாதுகாப்பை நமக்கு வழங்கும் என்பதால் பல்வேறு தரப்பினரின் தேர்வாக எல்.ஐ.சி. சேமிப்புத் திட்டம் உள்ளது. இந்த வரிசையில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு பாலிசி திட்டமாக உள்ளது தான் எல்.ஐ.சி ஜீவன் லாப் (LIC […]
women bank account 1602765091

You May Like