வீட்டிற்கு வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மலர்களிலேயே மல்லிகையின் வாசம் தனித்துவமானது. அதேபோல், பெண்கள் பலருக்கும் பிடித்த பூ என்றால், அது மல்லிகை தான். ஏன், சில ஆண்களுக்கும் கூட மல்லிகைப்பூ என்றால் பிடிக்கும். வீட்டுக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்தால், அதை பலரும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால், அப்படி வைக்கும்போது, அதிகப்படியான கூலிங்கால், மல்லிகைப்பூ லேசாக அழுகியது போல மாறிவிடும்.
பிறகு, வெளியே எடுத்து வைக்கும்போது சீக்கிரம் வாடிவிடும். சிலருக்கு, ஃபிரிட்ஜில் மல்லிகைப் பூ வைத்தால் அந்த வாசனை பிடிக்காது. மேலும், பிரிட்ஜிலும் அந்த வாசம் சுற்றிக்கொண்டே இருக்கும். மல்லிகைப் பூவை ஃபிரிட்ஜ் இல்லாமல், வாடாமலும் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கான சூப்பர் டிப்ஸை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* முதலில் ஒரு வெள்ளைத் துணியை எடுத்து அதை, தண்ணீரில் நனைத்து பிழிந்துக் கொள்ளுங்கள்.
* இதற்கிடையே, நீங்கள் மல்லிகைப் பூ வாங்கும்போது, மொட்டுப் பூக்களாக வாங்கி அதை உடனே கட்டி வைத்துவிடுங்கள்.
* பிறகு, அந்த வெள்ளைத் துணியில் மல்லிகைப் பூவை ரவுண்ட் ஷேப்பில் சுற்றி வைத்து துணியை மடித்து மூடிவிடுங்கள்.
* பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதன் மீது மிதக்கும் அளவுக்கு ஒரு சின்ன தட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
* அந்த தட்டில் வெள்ளைத் துணியில் மூடி வைத்த மல்லிகைப்பூவை வையுங்கள்.
* பின்னர், அதை எடுத்து தண்ணீர் ஊற்றி வைத்த பாத்திரத்தின் மீது மிதக்கும்படி வையுங்கள்.
* மேலும், அவ்வப்போது வெள்ளைத் துணி மீது தண்ணீர் தெளித்து விடுங்கள்.
* இப்படி வைத்தால், மல்லிகைப் பூ 3 முதல் 4 நாட்கள் வரை வாடாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.