“எந்த தார்மீக உரிமையும் இல்லை..” ராமர் கோவில் நிகழ்வு குறித்த கருத்துக்கு பாகிஸ்தானை சாடிய இந்தியா..!

modi ayodhya 2

அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.


வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, தனது மிக மோசமான மனித உரிமை சாதனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பாகிஸ்தான் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை நாங்கள் கண்டித்துக் கொள்கிறோம். அந்த கருத்துகளை நாங்கள் நிராகிரிக்கிறோம்… வன்முறை, ஒடுக்குமுறை, மற்றும் தனது சிறுபான்மையினருக்கு தொடர்ச்சியான துன்புறுத்தல் ஆகியவற்றால் கறைபட்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடான பாகிஸ்தானுக்கு, பிறருக்கு அறிவுரை வழங்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை,” என தெரிவித்தார்.. மேலும் “ பாசாங்குத்தனமான மதச்சார்பின்மை அறிவுரைகளை வழங்குவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த நிலையை நோக்கி கவனம் திருப்பி, தனது மிக மோசமான மனித உரிமை சாதனைகளில் கவனம் செலுத்துவது நல்லது,” என்றும் அவர் கூறினார்.

அயோத்தியாவில் உள்ள ராமர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற கொடி ஏற்றம் குறித்து பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நடவடிக்கை மதச் சிறுபான்மையினர்மீது அதிகரிக்கும் அழுத்தத்தின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியாகவும் உள்ளது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த கருத்துகளை தெரிவித்துள்ளது..

Read More : நாடு முழுவதும் 2 கோடி ஆதார் நீக்கம்.. இது தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…

RUPA

Next Post

13 பேர் பலி.. பலர் காயம்..! ஹாங்காங்கில் உயரமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!

Wed Nov 26 , 2025
இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் […]
hong kong

You May Like