21 வயது முழுமை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் சொத்துகளை உயிலாக எழுத முடியும். சொத்து சம்பந்தமாக வாரிசுகளுக்கு பிற்காலத்தில் எந்தவிதமான சிக்கல்களும் வந்துவிடாமல் இந்த உயில்கள் உதவுகின்றன. சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டும் உயிலாக எழுதமுடியும். உயில் எழுதும்போதோ அல்லது எழுதி முடித்த பிறகோ, தங்களுக்கு நம்பிக்கைக்குரிய 2 பேரிடம், உயில் பற்றி தகவல் சொல்லி வைக்க வேண்டும். இதனால் உரிய சமயத்தில், உரியவர்களுக்கு உயில் கைக்கு வந்தடையும்.
பாரம்பரிய முறைகள் மூலம் மட்டுமே உயில் எழுதிவரும் நிலையில், தற்போது ஆன்லைனிலும் உயில் தயாரிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. இஸ்லாமிய சமூகத்திற்கு ஷரியத் சட்டங்களில் நிபுணத்துவம் தேவைப்படுவதால், இவர்கள் மட்டும் தனிப்பட்ட மற்றும் சிறப்பு சேவைகளை அணுக வேண்டியிருக்கும். மற்றபடி, அனைவருமே ஆன்லைனில் இந்த வசதியை பெறலாம்.
ஆன்லைனில் உயில் எழுதுவதன் நன்மைகள்: ஆன்லைனில் உயில் தயாரிக்க, அதிக பணம் தேவைப்படாது.. வக்கீல்களையும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.. சேவை வழங்குநர் மற்றும் உயிலின் சிக்கலான தன்மையை பொறுத்து ஆன்லைன் உயிலின் விலை மாறுபடும். ஆன்லைனில் உயில் தயாரிக்கவும் 2 சாட்சிகள் கையெழுத்துகள் கட்டாயம் தேவைப்படும். ஆன்லைனில் உயில் தயார் செய்வதால், தவறுகளின் பெரும்பாலும் குறையும்.. ஆன்லைனில் எழுதுவதால், பிழைகள் இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.
சிக்கல்கள்: அதேசமயம், ஆன்லைனில் உயில் தயாரிக்கும்போது சில சிக்கல்களும் எழலாம்.. வக்கீல்களை தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்காது என்றாலும், அவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம். பெரிய அளவிலான சொத்துக்களை ஆன்லைன் உயில் தயாரிப்பில் கொண்டுவருவது சற்று சிரமம்.. அதேபோல, சிக்கலான குடும்ப சூழ்நிலைகள் இருந்தாலும, ஆன்லைனில் உயில் செய்வது பொருத்தமற்றதாக போய்விடும்.. எனவே, உயிலை தயாரிப்பதற்கு முன்னர், தனிநபர்கள் தங்கள் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை: நம்பகமான ஆன்லைன் சேவையை கண்டறிந்து, அவை பாதுகாப்பானதா? HTTPS குறியீடு கொண்ட URL பயன்படுத்தப்பட்டுள்ளதா? என அறிந்தே செயல்பட வேண்டும். மேலும், login டீடெயில்களை உருவாக்கி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.. ஏனென்றால், உயிலில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால், இது உதவும். முழுப்பெயர், முகவரி, சொத்து விவரம், முதலீடுகள், வங்கி கணக்குகள், சொத்துகள் விவரம் உட்பட அனைத்தையும் தவறில்லாமல் பதிவிட வேண்டும்.
Read more: ஷாக்!. இந்தியாவில் ஓமிக்ரானின் 4 துணை வகைகள்!. 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!. ஐசிஎம்ஆர் தகவல்!