பயனர்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் செயலியில் பயோமெட்ரிக் சென்சார்(ஃபிங்கர் ஃப்ரிண்ட்) வசதியை அந்நிறுவனம் கொண்டு வரவுள்ளது.
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது. அதாவது, முதலில் வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக வந்து, புகைப்படம், வீடியோ, மற்ற ஃபைல்ஸ் என பகிர ஆரம்பித்து, ஆடியோ கால், வீடியோ என கால் என நீண்டு தற்போது பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டது. பணம் அனுப்பும் வசதி வரை சென்று விட்டதால், வாட்ஸ் அப் பாதுகாப்பு வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனது பயனர்களின் பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம், புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிவித்துள்ளது.
அதில், ஏற்கனவே வாட்ஸ்சாப் செயலியை திறக்கையில், அதில் நாம் பதிவு செய்த பாதுகாப்பு வசதி (செக்கியூரிட்டி பின்) இருக்கும். தற்போது கூடுதலாக ஒரு பாதுகாப்பு வசதியை அதில் கொண்டு வந்துள்ளது. அதில், பயோமெட்ரிக் சென்சார் எனப்படும் விரல் ரேகையை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை அந்த போன் வாட்ஸாப் பயனர் தவிர்த்து வேறு யாரேனும் சாட்டிங் பாக்ஸ் உள்நுழைய பார்த்தல் முதல் தடவை எச்சரிக்கும்.
அடுத்து முழு சாட்டிங் விவரத்தையும் அழிக்க கேட்கும். அத்தனையும் மீறி வேறு யாரேனும் நுழைந்தால் மொத்த சாட்டிங்கும் அழிந்துவிடும்படி வகைப்படுத்தபட்டுள்ளது. இந்த வசதியை முதலில் பீட்டா வெர்சன் வாட்சாப் பயனர்களிடம் கொடுத்து ஆய்வு செய்து பின்னர் அனைவருக்கும் அளிக்கப்படும் எனவும், தேவை இருப்பின் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வாட்சாப் தெரிவித்துள்ளது.