“எவனும் கூட்டணிக்கு வரமாட்டான்”..!! எடப்பாடியை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சிரித்து என்ஜாய் செய்த புஸ்ஸி ஆனந்த்..!!

EPS 2025

அண்ணாமலையாவது பரவாயில்ல.. எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாட்டான் என த.வெ.க தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் இருக்கிறார்.

அவ்வபோது அரசியல் பணிகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று 10ஆம், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்கு விஜய் பரிசளிக்கும் விழா நடைபெற்றது. 3-வது ஆண்டாக இந்த விழா, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்நிலையில், தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜூனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருவரும், ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாஜக கூட்டணி உடைந்துவிடும் என்று ஆதவ் அர்ஜூன் சிரித்துக் கொண்டே புஸ்ஸி ஆனந்திடம் சொல்கிறார். மேலும், அண்ணாமலையாவது 10 பேரை கூட வெச்சிக்கிட்டு, தேர்தல்ல 18% ஓட்டு வாங்கினாரு. ஆனால், எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியல” என்று ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த வீடியோவுக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உறுதியான நிலையில், இந்த கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தையும் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More : பாமகவை இரண்டாக உடைக்க திட்டம் போடும் ஜி.கே.மணி..!! கொளுத்திப் போட்ட திலகபாமா..!! வெளியான பரபரப்பு ஆடியோ..!!

CHELLA

Next Post

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!

Sat May 31 , 2025
நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு பதப்படுத்தும் தொழில்களைப் பாதுகாப்பதற்கும் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரி குறைப்பு உடனே அமலுக்கு வந்ததாகவும் மத்திய […]
Oil 2025 1

You May Like