தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள்..!! காவல் துறையினருக்கு அதிரடி உத்தரவு போட்ட டிஜிபி..!!

வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களை காவல்துறை சேகரிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதோடு தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக டிஜிபி தெரிவித்தார். அதே நேரம் வதந்திகளை பரப்பிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பதற்றம் குறைந்திருக்கிறது எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

நிராகரித்த அஜித்..!! செட்டாகாத நயன்..!! கமலுடன் கைகோர்த்த விக்கி..!! வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Thu Mar 9 , 2023
ஏகே 62-வில் இருந்து விக்னேஷ் சிவன் கழற்றிவிடப்பட்ட அவரது அடுத்தக்கட்ட பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது 62-வது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். இதுதொடர்பான அறிவிப்பில், ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விக்னேஷ் சிவன் சொன்ன ஒன்லைன் ஆரம்பத்தில் பிடித்துப்போக அடுத்ததாக அவர் சொன்ன முழு கதையும் […]
நிராகரித்த அஜித்..!! செட்டாகாத நயன்..!! கமலுடன் கைகோர்த்த விக்கி..!! வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

You May Like