நிலம், வீடு அல்லது வீட்டு மனை வாங்கும் போது பத்திரப்பதிவில் பொதுவாக மக்களிடையே இருக்கும் கவனத்தை விட, பட்டா பெறும் நடவடிக்கையில் இன்னும் அதிக கவனம் தேவை என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய தவறுகள் கூட, பின் நாட்களில் நீண்ட கால நீதிமன்ற வழக்குகளாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
நிலம் வாங்கும் முன் பின்பற்ற வேண்டியவை:
விளை நிலங்களை வீட்டு மனையாக மாற்றி, DTCP அனுமதியின்றி விற்பனை செய்யும் நிலங்களை பத்திரப்பதிவுத்துறை பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அனுமதியற்ற மனைகள் அல்லது கூட்டுப்பட்டா நிலங்களை வாங்கும் முன் இருமுறை யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
* நிலம் விற்பவருக்கு சொந்தமானதா என்பதை வி.ஏ.ஓ அலுவலகம் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
* பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலத்திற்கு கையோடு பட்டா வாங்கிவிடுங்கள். அந்த பட்டாவில் உள்ள அளவு என்பது பத்திரப்பதிவு செய்த அளவுடன் சரியாக இருக்க வேண்டும்.
* நில வகையை சரிபார்க்க வேண்டும். பஞ்சமி நிலம், அரசு இலவசமாக வழங்கிய நிலம், நீர் நிலம், இந்து அறநிலையத்துறை நிலம் போன்றவை வாங்கத் தகுதி இல்லாத நிலங்கள்.
சில நேரங்களில், சர்வேயர்கள் தவறாக அளவீடு செய்வது பொதுவானது. இதனால், நிலத்தின் எல்லைகள் சீர்கெடும். அந்த நிலத்தின் பக்கத்து வீட்டிற்கே பட்டா கிடைத்துவிடும் அபாயம் உருவாகும். இதற்குத் தீர்வு பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்து சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சரியாக கிரயம் பெறும் நிலத்தின் பேரில் தான் கிராம நிர்வாக அலுவலரால் சிட்டா, ‘ ஏ’ ரிஜிஸ்டர் நகல், அடங்கல் நகல் (நிலத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் இதில் அடங்கி இருப்பதால் இது அடங்கல் என்று பெயர்) மற்றும் நில வரை படம் (Field Measurement Book, FMB ) ஆகியவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி சரியாக இருந்தால், அந்த நகல்களை விஏஓ ஆபிஸில் போய் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிற்கு வீட்டு மனை வாங்குவோர், கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டாவிற்கு பத்திரத்தின்படி விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்து பட்டா வாங்கினால் தான், நிலத்தில் வீடு கட்ட பில்டிங் பிளான் அப்ரூவல் கிடைக்கும். தனிப்பட்டா இல்லாவிட்டால் நிலத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சர்வேயர் உங்கள் அளத்தை தவறாக அளக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..
சர்வேயர் நீங்கள் வாங்கிய நிலத்திற்கு வந்து 30 நாள்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க வேண்டும். அதேபோல் சர்வேயர் உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தவறாக நிலத்தை அளந்து கொண்டிருந்தால் உங்களுக்கு பட்டா கிடைக்காது. அப்படி தவறு நடந்திருந்தால். அதனை இருவரும் சென்று மேல்முறையீடு செய்து, புதிதாக பட்டா தருமாறு வேண்டுகோள் வைக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்து சரி செய்து கொண்டால் மட்டுமே பட்டாவில் வில்லங்கம் பின்னாளில் வராது.
Read more: புது அப்டேட்… இவர்களும் மாதம் 1000 ரூபாய் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்…! தமிழக அரசு