“பல வருஷமா எதுவுமே நடக்கல”..!! பக்கத்து வீட்டுக்காரருடன் கள்ளக்காதல்..!! கணவன் சடலத்துடன் 2 நாள் பயணம்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Sex 2025 4

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியில் கதிரம்மா – வெங்கடரமணா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே மனக்கசப்பு நிலவியதாக கூறப்படுகிறது. ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவருடன் ஒருவர் பேசாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.


இந்த சூழ்நிலையில், பக்கத்து வீட்டு வேணு என்ற நபருடன் கதிரம்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பின்னர், நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து சந்தேகம் கொண்ட வெங்கடரமணா, மனைவியின் செயல்களை கவனித்ததோடு, கடுமையாக கண்டித்துள்ளார்.

ஒருநாள் இரவு வீட்டுக்குத் திரும்பிய ரமணா, மனைவி செல்போனில் வேணுவுடன் உரையாடுவதைக் கண்டதும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியை தாக்கியுள்ளார். இதனால், தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி, இரவு வழக்கம் போல் வேலை முடித்து வீடு திரும்பிய ரமணா தூங்கிக்கொண்டிருந்த நிலையில், கதிரம்மா மற்றும் வேணு இணைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர், சடலத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என முடிவு செய்த இருவரும், உடலை காரில் ஏற்றி, அதை எரிப்பதற்கு இடம் கிடைக்காமல் இரண்டு நாட்கள் காரில் சடலத்துடன் பயணம் செய்துள்ளனர்.

இறுதியில், காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு, தங்கள் வீட்டுக்கு மீண்டும் திரும்பி, வழக்கம்போல நடந்து கொண்டனர். ஆனால், காட்டுப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது, ரமணாவின் சடலத்தை கண்டுபிடித்தனர். கார் பதிவு எண்ணின் அடிப்படையில் விசாரணை நடத்தி, வேணுவை கைது செய்தனர். பின்னர், மனைவி கதிரம்மாவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : காதலனுடன் ஊரைவிட்டு ஓடிப்போக காத்திருந்த காதலி..!! குறுக்கே வந்த நண்பன்..!! ஆறுதலாக பேசி திருமணம் செய்து கொண்ட சம்பவம்..!!

CHELLA

Next Post

இன்ஸ்டாவில் மலர்ந்த ஒருதலை காதல்..!! இளம்பெண் கதறியும் மீண்டும் மீண்டும்..!! கோவையில் நடந்த பயங்கரம்..!!

Mon Sep 1 , 2025
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன், கோவையின் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண ஆன்லைன் நட்பாகத் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால் 2022ஆம் ஆண்டு, தினேஷ் நேரில் அந்தப் பெண்ணைச் சந்தித்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இளம்பெண் தன்னிடம் காதல் எண்ணமே இல்லை எனத் தெளிவாக […]
Insta 2025 1

You May Like