இனி பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியது தான்..!! 60 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் 900 கிமீ வரை காரில் பயணிக்கலாம்..!!

Water Car 2025

பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், எரிபொருள் தேவைப்படாத ஒரு வாகனம் குறித்த செய்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “பெட்ரோலும் வேண்டாம், டீசலும் வேண்டாம் – தண்ணீரை ஊற்றினாலே ஓடும் கார்” என்ற தலைப்பில் ஈரான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கசேமி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தனது காரில் தண்ணீர் நிரப்பி, அது இயங்குவதை செய்து காட்டும் அவர், “இந்த கார் வேறு எந்த எரிபொருளையும் நம்பி இல்லை. இது வெறும் தண்ணீரால் இயங்குகிறது” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அவரது விளக்கப்படி, இந்தக் காரின் டேங்கில் 60 லிட்டர் தண்ணீர் நிரப்பினால், 900 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். அத்துடன், 10 மணி நேரம் வரை தொடர்ச்சியாக இந்த கார் இயங்கும் திறன் கொண்டதாம். இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படை ரகசியம், அதன் விசேஷ எஞ்சின் தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ளது என்று கசேமி குறிப்பிடுகிறார்.

“இந்த எஞ்சின் ஆனது தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்து, அந்த செயல்முறையில் இருந்து சக்தியை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமே வாகனம் இயங்குகிறது” என்று அவர் கூறியுள்ளார். மேலும், இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் கார் வெளியிடும் ஒரே எரிவாயு நீராவி மட்டுமே என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்த அதிரடி வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருவதால், பலரும் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர், “இது உண்மையாக இருந்தால், கார் மற்றும் எரிபொருள் துறையில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதே வேளையில், சில நெட்டிசன்கள், “இந்த கண்டுபிடிப்பு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெறுமா?” என்ற நடைமுறைச் சிக்கலை எழுப்பியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தை விஞ்ஞான சமூகம் சற்று சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறது. தண்ணீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் பிரிப்பதற்கு அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும் என்றும், இது வெப்ப இயக்கவியலின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் கசேமியின் கூற்றை ஏற்றுக்கொள்ளாத போதும், சமூக வலைதளங்களில் இதற்கான ஆர்வம் தணியவில்லை. பலர், “இது நிஜமானால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படும்” என்று நகைச்சுவையாகப் பகிர்கின்றனர். அதேசமயம், “இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் விரைவில் மர்மமான முறையில் காணாமல் போய்விடுவார்” என்று கடுமையான மற்றும் கசப்பான கருத்துகளையும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்பும் இந்தியாவில் யூடியூபர் ஒருவர் இதுபோன்ற தண்ணீரில் இயங்கும் வாகன முயற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி, அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சந்தேகங்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்திருந்தாலும், கசேமியின் ‘தண்ணீர் கார்’ குறித்த வீடியோ உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இது உண்மையிலேயே செயல்படும் தொழில்நுட்பமா அல்லது வெறும் கற்பனையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More : அசைவப் பிரியர்களே உஷார்..!! மீன் சாப்பிட்டதும் இந்த 5 உணவுகளைத் தொட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

CHELLA

Next Post

சென்னையை குறிவைத்த கனமழை..!! 4 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Wed Oct 22 , 2025
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த சமீபத்திய தகவல்படி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இன்றிரவு (அக். 22) ஒருநாள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், வட […]
Rain 2025

You May Like