’இனி இன்டர்நெட் இல்லாமலேயே காணாமல்போன ஃபோனை கண்டுபிடிக்கலாம்’..!! ஈசியான வழி இதோ..!!

மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட, இந்த ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை டிராக் செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.


இந்த புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இனி உங்கள் மொபைல் ஆன்லைனில் இல்லாமல் இருந்தாலும் கூட, மொபைல் கடைசியாக ஆக்டிவாக இருந்த லொகேஷனை ஆஃப்லைனிலேயே நம்மால் பார்க்க முடியும் என்பதாகும். தற்போது வரை ஆண்ட்ராய்டு அல்லது வியர் ஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கி வரும் டிவைசுகள் அனைத்தும் ஆன்லைனில் இன்டர்நெட்டில் இணைந்து இருந்தால் மட்டுமே அதன் லொகேஷனை சரியாக பார்க்க முடியும். மேலும், அவ்வாறே லொகேஷனை டிராக் செய்தாலும் நம்மால் டிவைஸை லாக் செய்ய முடியும், நம்முடைய அக்கவுண்ட்டை சைன் அவுட் செய்ய முடியும், அது மட்டுமல்லாமல் மொத்த டேட்டாவையும் ஃபார்மேட் செய்ய முடியும்.

’இனி இன்டர்நெட் இல்லாமலேயே காணாமல்போன ஃபோனை கண்டுபிடிக்கலாம்’..!! ஈசியான வழி இதோ..!!

ஒருவேளை டிவைஸ் ஆனது ரிமோட் மூலம் ஃபார்மேட் செய்யப்படும் பட்சத்தில், அதன் பிறகு மீண்டும் எப்போதும் உங்களால் டிவைஸ் சர்வீஸை பயன்படுத்தி உங்களது மொபைலை கண்டுபிடிக்க முடியாது. மேலும், உங்கள் மொபைலை வைத்துள்ள யாரேனும் மொபைலை ரீசெட் செய்தாலும் ஃபைண்ட் மை டிவைஸ் செயலி வேலை செய்யாது. இந்த காரணங்கள் தான், தன்னுடைய புதிய அப்டேட் ஆக ஆண்ட்ராய்டு மற்றும் வியர் ஓஎஸ் இயங்குதலங்களில் இனிவரும் காலங்களில் மொபைல் திருடு போனாலும் அல்லது காணாமல் போனாலும் அதன் லொகேஷனை நம்மால் கண்டறிய இயலும். மேலும், சாம்சங் மற்றும் ஆப்பிள் டிவைஸ்களில் உள்ளது போல இவை என்க்கிரிப்டட் செய்யப்பட்டுள்ளதால், உங்களைத் தவிர வேறு யாரும் உங்களது மொபைலின் லொகேஷனை கண்டறிய முடியாது என்பது கூடுதல் வசதி ஆகும்.

CHELLA

Next Post

இவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் - வருமானவரித்துறை ஆணையா் அறிவிப்பு

Thu Jan 5 , 2023
வரிபாக்கி வைத்துள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “மதுரை மண்டலத்தில் வருமானவரித்துறை வசூல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் 2ஆயிரத்தி 100கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது, அடுத்துவரும் நிதியாண்டுகளில் கூடுதலாக வரிவசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் […]

You May Like