இனி வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இப்படியும் செல்லலாம்..!! உற்சாகத்தில் பயணிகள்..!!

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள் மெட்ரோ ரயிலில் இருந்து வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் செல்ல ஆட்டோக்கள், ஊபர், ஓலா கார், அரசின் மினி பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் வரை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த சேவையை லெக்கோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. ஆலந்தூர், செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மதுரவாயல் என மொத்தம் 28 இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதம் முழுவதும் பயணிப்போருக்கு 20% கட்டண சலுகையும், கூகுள் பே, போன்பே மூலம் செலுத்துவோருக்கு 10% சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மதுரவாயல் பைபாஸில் உள்ள ஒரு பெரிய குடியிருப்புக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

CHELLA

Next Post

தவறுகளை தடுக்க வேண்டியவர்களே ஊழியர்களை தவறு செய்ய தூண்டுகிறார்கள்…..! செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்…..!

Wed May 31 , 2023
தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும், நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. இதை மீறினால் பணியிடை நீக்கம் பணியிட மாறுதல் என்று மிரட்டுகிறார்கள். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று தெரிவித்துவிட்டு F1-2 என 500க்கும் மேற்பட்ட கடைகளை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like