ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு உலகளவில் மிகவும் பிரபலமானவர் ஜூனியர் என்டிஆர். இவரின் அடுத்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இயக்குனர் சிவா கொரட்டாலா இயக்கிவரும் இந்த படம், பான்-இந்திய படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. தற்காலிகமாக என்.டி.ஆர் 30 பெயரடிப்பட்டுள்ள இந்த படத்திற்க்கு “தேவாரா”என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று என்டிஆரின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, டைட்டிலுடன் பயங்கரமான ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு உடையில் ஒரு மூர்க்கமான அவதாரத்தில் காட்சியளிக்கிறார் என்.டி.ஆர், மேலும் கடலோரத்தில் பாறைகள் மீது ஆயுதத்துடன் நிற்கிறார். பின்னணியில் ஒரு படகில் இறந்த உடல்களின் குவியலை நாம் காணலாம். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த தேவரா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்டுகிறது. இந்த படத்தில் என்டிஆர்க்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், வில்லனாக சயீப் அலிகானும் நடிகின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.