கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது பெண்களை ஆரை நிர்வாணமாக ஆட வைக்கின்றனர். இந்த நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் வழக்கு தொடரப்பட்டது.
கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் என்பது இறை வழிபாட்டுக்குரிய இடம் அங்கு இது போன்ற ஆபாச நடனங்கள் நடக்கும் போது காவல்துறை என்ன செய்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.