சென்னை திருவொற்றியூர் சத்துமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவருக்கு, வரலட்சுமி (46) என்ற மனைவியும், நித்யா (26) என்ற மகளும், தமிழ் செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். இதில், நித்யா அம்பத்தூர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
அப்போது, கொடுங்கையூரை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலமுருகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதமாக கொடுங்கையூரில் வாடகைக்கு வீடு எடுத்து லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு நித்யாவை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் கொடுங்கையூர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, பாலமுருகனை வீட்டில் இருக்க வேண்டாம் எனக்கூறி நித்யா வெளியே அனுப்பி வைத்துள்ளார். பின்னர், நேற்று மாலை 5 மணியளவில் பாலமுருகன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, நித்யா விஷல் குடித்த நிலையில், மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நித்யாவின் பெற்றோர்களை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நித்யா லிவிங் டு கெதர் உறவில் இருப்பது எங்களுக்கு தெரியாது. அவரிடம் 25 சவரன் நகைகள் இருந்தது. அதை தற்போது காணவில்லை. இதனால், பாலமுருகன் எனது மகளை கொலை செய்துவிட்டு, நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என நித்யாவின் பெற்றோர் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாலமுருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ”நித்யாவின் பெற்றோர் நித்யாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். கடைசியாக நித்தியாவை பார்க்க அவரது தாய் வந்தபோது ரூ.4,000 பணத்தை நித்யாவிடம் இருந்து எடுத்ததாகவு, இதனால் நித்தியாவிக்கும் அவரது தாய்க்கும் சண்டை ஏற்பட்டதாக கூறினார். நேற்று முன்தினம் மாலை நித்யாவை நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் வீட்டிற்கு தான் வந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
அம்பத்தூரில் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது, நித்யாவுக்கு வீட்டில் வைத்தே தாலிக் கட்டியதாகவும், அதனை அவர் கழட்டி விட்டதாகவும் பாலமுருகன் கூறியுள்ளார். நித்தியா உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. அவர் ஏதோ ஒரு பாய்சன் சாப்பிட்டு உயிரிழந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நித்யாவின் செல்போனை ஆய்வு செய்தபோது நித்தியா கடைசியாக
ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த நபரை பிடித்த விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. போலீசார் வரவழைத்த நபர் ஒரு மருத்துவர். இவரை மிரட்டி நித்யா, ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளர். நித்யா ஐடி நிறுவனத்தில் வேலை செய்வதாக பெற்றோர்களையும், உடன் பழகுபவர்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.
ஆனால், அவர் பலரை காதல் வலையில் சிக்க வைத்து பணம் பறிக்கும் வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார். மேலும், வீடியோ கால் மூலம் பலரிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்து வந்துள்ளார். இந்த வலையில் அந்த மருத்துவரும் சிக்கியிருக்கிறார். அவர், நித்யாவுக்காக சுமார் ரூ.5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். இந்த வழியில் சிக்கியவர் தான் பாலமுருகன். இவர், 5 சவரன் நகையையும், பணத்தையும் நித்யாவிடம் பறிகொடுத்துள்ளார். நித்யா, தன்னுடன் பழகுவோரை பார்ட்டி, பப் என அழைத்துச் சென்று குடிபோதையில் இருப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அவர் உயிரிழப்பதற்கு முன் நித்யா கடைசியாக டாக்டருக்கு போன் செய்து நான்
உன்னுடன் வாழ வேண்டும் என பேசியுள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பே நித்யாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் டாக்டர் பணத்தைக் கொடுத்து விட்டு அவரிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த நித்யா, மதுபோதையில் விஷத்தை அருந்தி தற்கொலை செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
Read More : இனி கவலையே வேண்டாம்..!! அவசரத்திற்கு உதவும் ஆதார்..!! ரூ.10,000 வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!