ஒடிசா ரயில் விபத்து இதுவரையில் எத்தனை உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது…..? தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….!

ஒடிசா மாநிலத்தின் ஷாலிமாறிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த 2ஆம் தேதி பயணித்துக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசூர் மாவட்டம் பாகா மஹா பஜார் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.


அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும் அருகில் இருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 275 பேர் பலியாகினர். அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக ஒடிசாவின் தலைமைச் செயலாளர் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் ரயில் விபத்தில் பலியானவர்களில் இதுவரையில் 151 உணவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன இன்றும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படும் முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல உரிய செயல்முறைக்கு பின்னர் அனைத்து உடல்களும் தொடர்புடையவர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவவில்லை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அரசை ஏற்றுக்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Post

ஒடிசா ரயில் விபத்து..!! முன்கூட்டியே எச்சரித்த ரயில்வே உயர் அதிகாரி..!! விழித்துக் கொள்ளாத மத்திய அரசு..!!

Mon Jun 5 , 2023
கர்நாடகாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி நிகழ்ந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சம்பவத்தில் இருந்து மத்திய அரசு விழித்துக்கொள்ளாதது தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்ற போது இண்டர்லாக்கிங் அமைப்பு செயல்பாட்டில் இருந்ததால் ஓட்டுனர் கடைசி நிமிடத்தில் ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்திருக்கிறார். இது தென் மேற்கு ரயில்வேயின் தலைமை […]
Train accident.3

You May Like